Saturday 25 October 2014


தந்தை இருந்தும்  
தாயும் இருந்தும்  
சொந்தம்  எதுவுமில்லே !..



மனதைத் தொடும்  பாடல் வரிகள் ..
சிந்து பைரவி என்ற திரைப்படத்திலிருந்து !

இந்த வரிகள்  ஒரு கற்பனைக் கதைக்காக  எழுதப் பட்ட
பாடல் வரிகளா ?  அல்லது  அந்த  பாடலாசிரியாரின்  உள்ளத்தில்
எழுந்த குமுறல்களா ?


2014,  June  மாத   இறுதியில் ,   திரு. வை. கோபாலகிருஷ்ணன்          அவர்களால் , சிறுகதை  விமர்சனப் போட்டிக்காக வெளியிடப்பட்ட
சிறு கதை " தாயுமானவள் " .


இந்த கதையும் , கதையின் கருத்தும்  என்னுள் மிகுந்த  தாக்கத்தை  ஏற்படுத்திவிட்டது !

இந்த போட்டியில்  கலந்து கொள்ள  விமர்சனம் எழுத முயற்சித்தேன் !
முடியவில்லை !

படிக்கும்  வாசகனின்  மனதில்  ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடிய ,
ஏற்படுத்திய  அழகான  கருவை,  மிக மிக  நேர்த்தியாக , அழகான
வரிகளில்  வெளியிட்டிருந்தார் , திரு. திரு. வை. கோபாலகிருஷ்ணன்  
அவர்கள் !

பல  கதைகளை எழுதி,  பரிசு பெற்றிருக்கும் கதாசிரியரை , இதற்காக
பாராட்டப் போவதில்லை .....!

மாற்றாக,

நன்றி  கூறிக்கொள்கிறேன் !

என்னை துணிந்து ஒரு முடிவு எடுக்க  ஊக்குவித்தது,
திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களின்  " தாயுமானவள் "
என்ற சிறுகதை !

இன்று, என் சிறிய குடும்பத்தில் , 10ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்
ஒரு இளம் பெண்  வளைய வந்து கொண்டிருக்கிறாள் !

மிகச் சரியானதொரு  சமயத்தில் , " தாய்மானவள் " என்ற
சிறந்த கதையை பதிவிட்டு, என்னை ஊக்குவித்த
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ,
என் மனமார்ந்த நன்றிகள் !