Showing posts with label லக்ஷ்மி. Show all posts
Showing posts with label லக்ஷ்மி. Show all posts

Tuesday, 16 June 2020

லக்ஷ்மி வசமாக வேண்டுமா ?

லக்ஷ்மி வசமாக வேண்டுமா ?




எவ்வளவு காசு வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம்! ஆனால் சேமிப்பதில்தான் திறமையை அடங்கியிருக்கின்றது. வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான குறிப்பு தான் இது.

ஒரு கண் தேங்காய் 1, சிறிய இளநீர் பிஞ்சு(குட்டியா இருக்கும்), 
மூங்கில் குச்சி ஒன்று, 
சிறிய கருங்கல், 
சந்தனக்கட்டை சிறிய துண்டு, 
துளசி குச்சி ஒன்று, 

இவ்வளவுதான். இதில் உங்களுக்கு ஏதாவது கிடைக்கவில்லை என்றால், கட்டாயம் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு மரப்பெட்டியில் வையுங்கள்.

உங்கள் கைகளுக்கு வரும் ரூபாய் நோட்டை, ஒரு முறை, இந்த பொருட்களை எல்லாம் வைத்திருக்கும் பெட்டியில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ‘இந்த பணமானது வீண் விரயம் ஆகாமல், நல்ல காரியங்களுக்கு மட்டுமே செலவாக வேண்டும். மகாலட்சுமி, எங்களிடம் நிரந்தரமாக தங்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டாலே போதும்.

மகாலட்சுமி உங்கள் வசமாகுவாள் என்பதில் சந்தேகமே இல்லை!

ஹரி ஓம் !!