Thursday 1 January 2015


அல்லல்  போம் !
வல் வினை  போம் !
அன்னை  வயிற்றில்  பிறந்த 
தொல்லை போம் !
போகாத்  துயரம் போம் !
நல்ல குணம்  அதிகமாம் :
அருணைக் கோபுரத்துள் 
வீற்றிருக்கும் 
செல்வக் கணபதியை 
கை தொழுதக் கால் !


அருணை  எனப்படும்  திருவண்ணாமலை
கோபுர வாசலில்  வீற்றிருக்கும் ,
செல்வக் கணபதியை ,
கை தொழுது  கும்பிட்டால் ,

அல்லல் போம் .! ....

எல்லா விதமான  தடங்கல்களும்,
தொல்லைகளும்  போகும் !

வல்  வினை போம் !...... 

என்ன செய்தாலும் , பின் தொடர்ந்து
 பயனைத் தரும் , நாம் செய்த  தீய வினைகளும்
அழிந்து போகும் !

அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் !

அடுத்தடுத்து  பிறவிகள் எடுக்க காரணமான ,
முன் வினைகளின்  தொல்லையும் தீர்ந்து போகும் !

போகாத் துயரம் போம் !

என்றும் நீங்காமல்  மனதில் நிற்கும்
துயர நினைவுகள் எல்லாம்
தெளிந்து போகும் !


அது மட்டுமா?

நல்ல குணம்  அதிகமாம் !

நல்ல குணங்கள்  நம்மில் மேன்மேலும்  பெருகும் !


இந்த நாள் இனிய நாள் !
அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  வாழ்த்துக்கள் !



                                       


No comments:

Post a Comment