Tuesday 26 May 2020

வாழை மரம்

வாழை மரம்


ரகசிய தாந்திரீக முறைகள்  :

(1) தரித்திர பிணிகள் விலக
அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவிட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.
(2) திருமணம் தடை விலக
திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.
(3) சர்வ தரித்திரங்கள் விலக
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த வேளையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் (கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். (வாழை மரத்தை வெட்டினாலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.)
(4) குழந்தை பாக்கியம் பெற
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் உடனே கிட்டும்.
(5) பித்ரு தோஷம் விலக
100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் முழுவதுமாக விலகி விடும்.
(6) செல்வம் மேலும் பெருக
சம்பள பணத்தையோ அல்லது சுப காரியத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.
அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.
(7) அன்ன தரித்திரம் விலக
அக்ஷய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.
(8) வியாபார விருத்தி பெருக
இதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும், இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பல மடங்கு பெருகும்.
(9)வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற
வாழைப்பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகூர்த்த நாளில் சுபவேளையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நடைபெறும், குடும்பம் சுபீக்க்ஷம் பெருகும், பணம் வீண் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குல விருத்தி அடையும்.
ஹரி ஓம் !!!

Monday 25 May 2020

குபேரனின் ஜாதகம்

குபேரனின் ஜாதகம்



இந்த ஜாதகத்தை பூஜை அறையில்
வைத்து வழிபட்டால் குறைவில்லா
செல்வம் பெருகும் என்பது
பலரின் அனுபவ உண்மை.
குபேரனின் பயோடேட்டா.
***************************
இயற்பெயர் - வைச்ரவணன்,
ஏகாஷி பிங்களி
பெற்றோர் - விச்ரவஸ்,
பரத்வாஜர் மகள் ஸ்வேதா தேவி
பிறந்த தேதி -
ஐப்பசி 3ம் தேதி
மங்கள வாரம் -
5064-த்ரேதா யுகத்தில்
ஸ்ரீமுக ஆண்டு.
ஜென்ம நட்சத்திரம் -
பூர்வாஷாடா என்னும்
பூராடம்.
ராசி லக்னம்:
தனுசுராசி
மீன லக்கனம்.
அவதரித்த குறிக்கோள் -
உண்மையான பக்தி நேர்மை
கொண்டவர்கள் பூஜை செய்தால்
சகல ஐஸ்வர்யங்களும்
கொடுத்து வாழ்வை உயர்த்துவது.
தாத்தா - புலஸ்தியர்,
கொள்ளு தாத்தா - பிரம்ம தேவர்,
இருப்பிட முகவரி :
கயிலாய கிரகத்தில்
உள்ள அளகாபுரி.
மனைவி : நிதி என்கிற சித்திரலேகா
சகோதரி : சூர்ப்பணகை,
பிடித்த கிழமை-வியாழன்.
பிள்ளைகள் :
நளகூபன், மணிக்ரீவன்.
வாகனங்கள் :
புஷ்பக விமான மனித வாகனம்.
அபிமான நிதி தேவதாக்கள் -
சங்கம் பதுமம் பதவியும்.
சிறப்புப் பட்டமும் -
நவநிதிகளின் அதிபதி.

சிவபெருமானைக் குறித்து
800 வருடங்கள் தவமியற்றி
அவரது நட்போடு பட்டம்
பெற்றது.

பிரம்மனை நோக்கித் தவமிருந்து
வடக்கு திக்கின் பாலனாக
ஐஸ்வர்யங்களின் அதிபதியாக
பதவி பெற்றது.
செய்த பெரும் சேவை :
பத்மாவதி தாயாரை மணந்து
கொள்ளும் பொருட்டு
ஏழுமலையப்பனுக்குக்
கடன் உதவி.
பிடித்த நைவேத்யம் :
எலம், லவங்கம், கிராம்பு,
வாசனை திரவியங்கள்
கலந்த பால், கேசரி,
அவல் பாயசம்,
சர்க்கரை அன்னம்.
பிடித்த வஸ்திரம் :
சிவப்பு பிரியமாக

தங்கும் இடம் :
வில்வமர நிழல்,
மந்திரங்கள் வசிக்கும் இடம்,
வலம்புரிச்சங்கு,
தாமரை மலர்,
வாஸ்துக் குறையில்லாத வீடு,
சானக்ராமம்,
ஸ்வர்ணத்தால் லிங்கம்,
ஸ்படிக லிங்க வழிபாடு
செய்யும் இடம்.
மேலும் வழிபாடு:
குபேர ஜாதகம்.
குபேர ஜாதகம் என்பது
இதுதான்.இந்த குபேரன்
ஜாதகத்தை
வைரக்கல்லைப்போல
வழிபட்டால்,அது நம்மை
வளப்படுத்தும்.இதை
பிரிண்ட் எடுத்து வைத்துக்
கொள்ளவும்.

உங்கள்பூஜை அறையில்
வைத்து வழிபடவும்.

அபூர்வ குபேர மந்திரம்
*************************
வட திசைக்கு இறைவன் குபேரன்.
செல்வக் கடவுளாகிய குபேரன்
தன் தவத்தால் ,சிவனுக்குத்
தோழனானான். சுக்கிரனின்
கர்வத்தை அடக்கிய பெருமை
குபேரனுக்கு உண்டு.
எந்த ஒரு பூஜையின் இறுதியிலும்
தீபாராதனை செய்யும்போது
குபேரனை வணங்குவது வழக்கம்.
*ராஜாதிராஜாய ப்ரசக்ய ஸாகினி*
*நமோவயம் வைஸ்ரவநாய குர்மஹே*
*ஸமேகாமான் காமகாமாய மஹ்யம்*
*காமேஸ்வர வைஸ்ரவனோ ததாது*
*குபேராய வைஸ்ரவநாய மஹாராஜாய நம:*
தீபம் காட்டும்போது தினமும்
இதைச் சொல்லி குபேரனை
வழிபடவும். வாழ்வு செம்மையுறும்.
குடும்பம் தனிச்சிறப்பு பெறும்.

















நன்றி  : 


ஹரி ஓம் !!


Friday 8 May 2020

சரணாகதி

சரணாகதி 
நேற்றுவரை என்னை ஐயா என்று 
கூப்பிட்டவர்கள்,இன்று ஏன் 
அவமரியாதையாய் அதட்டுகிறார்கள் ?
கை கூப்பியவர்கள் இன்று காலைத் 
தூக்குவது ஏன்?
நேற்று புகழ் மாலை சூட்டக் 
கூடிய கூட்டம் உண்மையில்லையா ? 
என்ன நடக்கிறது இங்கே!
என்ன காரணம் ?
யோசி ! 
ஆழ்ந்து யோசி ! 
என் மனம் சரணடையவில்லை !
எப்படி அதை தீர்மானித்தாய் ?
சரணடையாத மனம், 
தான் என்ற 
அகந்தைக்கு ஆட்பட்டுவிட்டது !  
தான் என்ற அகந்தை எழும்பும்போது, 
புலன்கள் கிளறி எழும்புகின்றன ! 
புலன்கள் கிளறி எழுந்தால் ? 
அதற்குத் தீனி தேவைப்படுகிறது. காம, க்ரோத, 
மத மாச்சர்யங்கள் விழித்தெழுகின்றன ! 
அதனால் என்ன? அதையெல்லாம் 
விட்டொழித்தவன் தானே நீ ?
அகந்தை எழும்பும்போது, இவை அனைத்தும் 
புத்துயிர் பெருகின்றன ! தன் உணவுக்காகப் பேயாய்
அலைகின்றன. கோபம் தலைக்கேறுகிறது.
வார்த்தைகள் வரம்பு மீறுகிறது. எனக்கு மட்டுமே
எல்லாம் தெரியும் என்ற மமதை 
தலைவிரித்து ஆடுகிறது. நான் என்ற எண்ணம் 
தலை நிமிர்ந்து நிற்கிறது ! புலன்கள் 
அனுபவிக்க ஆரம்பிக்கின்றன. அதன் பலன்களும்
தொடர ஆரம்பிக்கின்றன, 
விதைத்ததுதானே முளைக்கும் ?
ஆம். ! எத்தனை அனுபவித்தாலும், இந்த
புலன்களுக்குப் போதவில்லை. அனுபவிப்பது,
புலன்களா, மனமா அல்லது இவை இரண்டுமா
என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. 
புலன்கள் மூலம், மனது அனுபவிக்கிறது. மனதை
வைத்துக் கொண்டு புலன்கள் வேலை 
செய்கின்றன. வினையும், வினையின் பயனும், 
தொடர் சங்கிலியாய் துரத்தும் !
சாதாரண மானுடன் நீ !
 உன்னால் மீளவே முடியாது !
முடியும் ! மனம், புலன்கள் இவைகளைத் தாண்டி
உள்ளுக்குள் ஒரு அமைதி பரவ வேண்டும். 
அந்த அமைதி பெற இறையருள் வேண்டும் !
அந்த இறை அருளைப் பெற, மனதில் மற்றச்
சலனங்களைத் தவிர்த்து,  இறையின் நினைவை
ஆழ்ந்து உள்ளுக்குள் அழுத்திக் கொள்ளவேண்டும்.
இறை நினைவை மனதில் நீக்கமற நிலைக்கச்
செய்வதற்கு பணிவு வேண்டும். அந்த பணிதலின்
கடை நிலையே சரணாகதி. 
அந்த இறையிடம் நீயே சரணம் என்று
சொல்லிவிட்டால் போதுமா ?
போதாது ! தன்னை முழுவதுமாய் இறைவனுக்கு
ஒப்படைத்தலே சரணாகதி. தன்னை முழுவதுமாய்
ஒப்படடைத்தவனிடம் இருந்து வரும் 
வார்த்தைகள் தடிமனாக இருக்காது, வரம்பு 
மீறாது. எவர் மீதும் கோபம் வராது.  இறைவனிடம் 
தன்னை ஒப்புக் கொடுத்தவனை, எந்த புலன்களும்
கிறங்கடித்து, வேடிக்கைப் பார்க்காது. புலன்கள் 
அமைதியானால், மனம் என்னை போற்றியவனை, 
இழித்தவனை, தூற்றியவனை, நிந்தித்தவனை 
வேடிக்கைப் பார்க்கத் துவங்கும்.  அந்த 
போற்றலும், தூற்றலும் அவனவன் வினையென
உணரும் !  நடந்தவை எல்லாம் இறையின் 
செயலே என்பது வலியுறுத்தப்படும். 
முதலில் நான் எழுப்பிய வினாக்கள் 
அர்த்தமற்றது என்பது இப்போது புரிந்தது.
யாவும் இறையின் செயல் என்பது மறந்து 
போனது. நான் வளர்வதும், வாழ்வதும் அவன்
செயல் என்பதுவும் மறந்து போனது.  
நான் முக்கியம் என்ற நினைப்பும்,
எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற 
எண்ணமும் அகந்தையைக் கிளறி விட்டது.  
அதனால் அமைதி போயிற்று ; பணிவு போயிற்று :
இதனால் சரணாகதி என்ற தவமும் போயிற்று !
இறைவா ! என் ஐயனே !  எம்பிரானே !
முந்தைய நிகழ்ச்சிகள் யாவும் உன் செயலே 
என்பதை உணர்ந்து கொண்டேன்.  இப்போது 
நான் கற்ற பாடத்தைத் தீவிரமாக பயிலுவேன். 
ஆழ்ந்து , ஆழ்ந்து தவமியற்றி, உன் பாதங்களைச் 
சரணடைந்து, உன் பாதங்களை இறுகப் பற்றிக்
கொள்வேன். 
இறைவா! என் குருவே !  
நன்றி !
ஓம் …. ஓம்…. !

Thursday 7 May 2020

கற்றல்

கற்றல்

சொல்லிக் கொடுப்பதில் எந்த
சிரமம் இல்லை. 
சொல்லிக்கொடுத்ததை, 
சொல்லிக் கொடுத்த
விதத்தில் புரிந்துகொள்வதுதான்
சிரமம். 
கற்றுக் கொள்பவன்,
சொல்லிக் கொடுப்பவன் மேல் தன்
முழுக் கவனத்தையும் செலுத்த 
வேண்டி இருக்கிறது. 
அப்படி ஒரு கவனம் வர, 
ஆர்வம் தேவை. 
இந்த ஆர்வத்திற்கு அப்பால்,
சொல்லிக் கொடுப்பவனுக்கு
விஷயம் தெரியும் என்ற 
நம்பிக்கை, கற்றுக் கொள்பவனுக்குத்
தேவைப்படுகிறது.
கற்றுக் கொள்ள. நல்ல சூழ்நிலையும்
நல்ல நேரமும் தேவைப்படுகிறது. 
எனவேதான், அன்றைய 
குருகுலங்களும், ஆசிரமங்களும்
பசுமை நிறைந்த சூழ்நிலையில்
அமைக்கப்பட்டன.
70, 80 வரை பள்ளிக்கூடங்களும்,
கல்லூரிகளும், ஊருக்கு வெளியே
இருந்தன. 
கற்றுக் கொள்வதில் தேவைப்படுவது
கவனம். கவனம் குறைந்தால்,
நஷ்டம் கற்றுக் கொள்பவனுக்கேத் 
தவிர, சொல்லிக் கொடுப்பவனுக்கு 
இல்லை. 
எல்லாப் படிப்பும், ஒன்றின் 
தொடர்ச்சியாய் ஒன்று என்று
போவது. ஒரு இடத்தில் கவனம்
குறைய, ஒரு பள்ளம் விழும். மற்ற
விஷயங்கள் புரியாது போகும். 
எனவே, எதையும் கற்கும்போது
ஆர்வமும், கவனமும் தேவை !

ஹரி ஓம் !

Monday 4 May 2020

படித்தடில் பிடித்தது !

படித்தடில் பிடித்தது !

நகரத்து வாழ்க்கை..!

கிராமத்தில் இருந்து 
சென்னை அடுக்கு மாடிக்கு ....

சென்னையில் வேலை பார்க்கும் ஒரு 
இளைஞன் தன்னுடைய கிராமதிருக்கு 
சென்று அவனின் அப்பாவிடம் நான் 
சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் ..
 5 லட்சம் பணம் கேட்டான் , அதற்கு அவர் 
இன்னும் உன்னக்கு திருமணமே ஆகவில்லை 
அதற்குள் ஏன் அவசரம் என்றார் .
இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் 
வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் 
குறைந்தது 60 லட்சம் தேவைப்படும் ... 
தினம் தினம் விலை ஏறி கொண்டே
போகிறது என்றான் ... யோசித்த அப்பா 
சரியான முடிவு தான் .. ஆனால் நான் 
ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க 
வாங்கிய கடனை உன் சம்பளத்தில் 
தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம் .
திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி??? 
நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை 
விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை 
அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் 
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் ...
 5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள 
தொகைக்கு என்ன பண்ணுவ என்று கேட்க .. 
மகன் -அதை வங்கி லோன் தரும் ..நாம் 
அதை மாதம் தவனை முறையில் 20 
வருஷத்திருக்கு செலுத்தலாம் என்றான் ... 
ந்த மாதிரியான வீடு எப்டி இருக்கும் என்று 
கேட்க .. 300 வீடு கொண்ட அடுக்கு மாடி 
குடியிருப்பு ,சகல வசிதிகளும் இருக்கும் ..
அடுக்குமாடி என்றவடுன் அவர் முகம் மாறியது .. 
ஆனால் மகன் ஆசைகேற்ப ஒரு பகுதி 
விவசாய நிலத்தை விற்று வீடு 
வாங்க பணம் கொடுத்தார் ..

வீடு வாங்கிய பின்பு அப்பாவை

 சென்னை வாருங்கள் என்றான் .. 
அவரும் புதிய வீட்டை பார்க்க மிகுந்த 
ஆசையோடு வந்து அடைந்தார் ...ஒவ்வொரு 
வீட்டுக்கும் நல்ல இடைவெளி விட்டே 
பார்த்து பழகிய மனிதன் இப்படி ஒரு வீட்டை 
பார்த்து அசந்து நின்றார் .. உள்ளே சென்று 
900 சதுர அடி வீட்டை பார்த்து இதை 
வாங்கவா நம்மக்கு சோறு போட்ட 
நிலத்தை விற்க சொன்ன என்றார் ....
இது எல்லாம் உங்களுக்கு புரியாது 
இங்க அப்டிதான் ...என்னோட லைப் 
சென்னையில்தான் இன்னிமே நம்ம 
ஊருக்கு விசேசத்துக்கு மட்டும் தான் 
வர போறேன் .. இங்க தனி வீடு எல்லாம் 
வாங்க முடியாது அதுக்கு கோடி
 கணக்குல பணம் வேணும் ...
பேசாம தூங்குங்க வந்தது 
அசதியா இருக்கும் ...

மனம் கேட்காமல் உறங்கினர் ....

மாலை வேலையில் வீட்டை விட்டு 

வெளியே வந்தார் .. மற்ற வீடுகள் 
அனைத்தும் உள்ளே பூட்ட பட்டு இருந்தது ... 
கீழ இறங்கி வந்தவர் சில பெற்றோர்கள் 
தங்கள் சிறு குழந்தைகளை பூங்காவில் 
விளயாட வைத்து கொண்டு இருந்தார்கள் ... 
இவருக்கு மனதில் ஒரு சந்தோஷம் 
அதை பார்த்த படி நின்று கொண்டுஇருந்தர் ..
.பக்கத்தில் வந்த செக்யூரிட்டி அய்யா 
நீங்க சரவணன் சார் அப்பாவா என்றான்... 
அமாம் என்றார் .. சார் சொல்லிட்டு தான் 
போனாரு ... வாங்க சார் டி சாபிடலாம் 
என்றான்... சரி என்று நகரும் போது 
ஏன் பா இங்க யாருமே ஒருதற்கு ஒருத்தர்
 பேசிக்க மாட்டாங்களா எல்லாம்
 வீடு உள்ள பூட்டிகிரங்க ????

அது எல்லாம் அப்படிதான் அய்யா ... 

எல்லாத்துக்கும் நிறைய வேலை ...
காலையில ஆரம்பிச்சு நைட் 
வரைக்கும் .. பல வீட்ல கணவன் 
மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு 
போறாங்க ... அவுங்க சின்ன பசங்கள 
பக்கதுல இருக்க ஹோம் ல விட்ருவாங்க .. 
நைட் யாரு முதல வரங்களோ அவுங்க 
கூட்டிட்டு வருவாங்க ...பெத்த புள்ளைய
யாருகிட்டயோ விட்டு போவாங்கள ??? 
ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம்
 இங்க வர மாட்டங்கள ??? 
அதுவா இவங்கு இருக்க பிஸில ... 
பெத்தவுங்கள பார்க்க முடியாதுனு ....
ஒன்னும் அவுங்க சொந்த ஊர்ல 
விட்ருவாங்க ..இல்லாட்டி முதியோர் 
இல்லத்தில் சேர்த்து விட்ட்ருவங்க .. 
இதை கேட்ட ஆச்சரியத்தில் நின்று 
கொண்டு இருக்க .. 
இதோ போராறே சேகர் சார் உங்க 
வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் இப்போ 
கூட இவர் பையன அங்க இருந்து 
தான் கூட்டிட்டு வரறாரு ...

திகைத்து நின்ற பெரியவர் .. 

தான் மகனிடம் ஏதும் கேட்காமல் 
ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு 
கடந்தார் ...ஒரு நாள் மாலை கீழே 
நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரை பார்த்தார் ... 
என்ன தம்பி ஆச்சிரியமா இருக்கு ..
இன்னக்கி வேலை இல்லையா ?? 
இல்ல அய்யா .. லீவ் போட்டுட்டேன் ... 
எதுவுமே பிடிக்கலே ... 
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு ... 
ஓஹோ சரி சரி ... எங்க உங்கள் மனைவி 
என்றார் ... 
அவளுக்கு செகண்ட் ஷிபிட் 
நைட் 12 மணி ஆகும் .. 
அதுவரைக்கும் நான் பையன 
பார்த்துக்குவேன் ... 
அப்புறம் கலையில நான் வேளைக்கு 
போயிருவேன் ... அவ வீடு 
வேலையெல்லாம் முடிச்சுட்டு 
பையன பக்கத்துக்கு ஹோம் ல 
விட்டுட்டு வேளைக்கு போய்டுவா 
என்றான் சேகர் ... 
அப்போ நீங்க ரெண்டு பேரும் 
பேசிக்கவே மாட்டிங்கள ??? ச
ண்டே மட்டும் தான் பேச முடியும் 
அதுவம் அவளுக்கு முன்றாவது 
ஷிப்ட் நைட் 10 மணிக்கு போய் 
காலையில் 6 மணிக்கு வருவா .. 
அப்போ ஒரே தூக்கம் தான் .. 
சாய்ந்தரம் எதாவது ஹோட்டல் 
போய்ட்டு சாப்பிட்டு வருவோம் என்றான் ... 
எதுக்கு பா இப்டி கஷ்ட படனும் ??? 
இப்படி இருந்த தான் இங்க வாழ முடியும் .. 
அதற்கு அந்த பெரியவர் .. 
நீங்க சொல்றது தப்பு இப்படி இருந்தா 
தான் வசதியா வாழ முடியும்னு சொல்லுங்க .. 
என்றார் .. அதை கேட்டவுடன் 
செவியில் அறைந்தது போல 
இருந்தது சேகருக்கு ...

அடுத்த நாள் தான் மகனிடம் நான் 

ஊருக்கு போறேன் பா என்றார் 
பெரியவர் ..என்ன அப்பா இவளவு 
அவசரம் ....ஒன்னும் இல்ல 
படிச்சா நல்ல இருக்கலாம் ...
அப்டிங்கற எண்ணத்துல தான் உன்னை 
கடன் வாங்கி படிக்க வச்சேன்.. 
ஆனா நீ இன்னும் உன் வாழ்கையே 
ஆரம்பிகல அதுக்குள்ள 
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் 
ஆயிட்ட ... இனிமே உனக்கு கல்யாணம் 
பண்ணா அவளுக்கு அப்புறம் 
உன் குழந்தைக்கு சேர்த்து உன் 
மனைவியும் வேலைக்கு போகணும் ... 
கடைசியா படிப்பு உன்ன ஒரு 
கடன்காரனாத் தான் ஆக்கும்னு 
தெருஞ்சு இருந்த உன்ன படிக்கவே 
வச்ருகமாட்டேன் ....விவசாயம் 
செஞ்சாலும் நான் யார்கிட்டயும் 
உன் படிப்க்கு தவிர கடன் வாங்கல .... 
இனிமே உன் வாழ்கையில நிமதியே 
கிடயாது அப்டிங்க்ரத நினைக்கிற 
போது தான் கஷ்டமா இருக்கு ...

மீண்டும் திரும்பி வருவாய் என்று 

நம்பிகையுடன் கிளம்புகிறேன் 
என்று தனது கிராமத்திற்கு சென்றார் ...

அவருக்கு எப்படி தெரியும் 

இந்த சென்னை வாழ்விற்கு 
என்ட்ரி மட்டும் தான் 
எக்ஷிட் கிடையாது என்று ...

சரவணனும் ,சேகரும் அவர் 

அவர் வேலையை செய்ய தொடிங்கினர்கள்



Dec 24, 2016, 9:08 PM