" அட்சய "
' அட்சய " என்றல் வளர்தல்.
மஹா பாரதத்தில் , தன் மானத்திற்காக
போராடிய திரௌபதி, கண்ணனைச்
சரணடைய, அங்கு வந்த கண்ணன்
" அட்சய " என்றாராம்.
திரௌபதியின் துகில் வளர்ந்தது.
யார் எப்போது எதைக் கேட்டாலும்,
இல்லை என்று சொல்லாமல் கொடுத்தான்.
செல்வம் வளந்தது.
மஹாபாரதத்தில், மிக மிக சூக்ஷமமான
நிகழ்ச்சிகள் இவ்விரண்டும்.
கர்ணன் செல்வத்தை
தானமாகக் கொடுத்தான்
திரௌபதி ஒருமுறை
வஸ்திர தானம் செய்திருந்தாள்.
இவ்விருவரின் செயல்கள்,
பிரதி பலன் எதிர்பார்க்காமல்
செய்யப்பட்டவை.
விதைத்தால்தான், விதைத்தது முளைக்கும்.
கர்ணனும், திரௌபதியும் பிரதிபலன் பாராமல்
செய்தது, பல மடங்காகப் பெருகியது !
கொடுத்தது வளர்ந்தது..... !
காசு கொடுத்து வாங்கியது வளருமா ?
No comments:
Post a Comment