Saturday 25 April 2020

கேட்டதும் கேட்காததும் !

கேட்டதும் கேட்காததும் !



1
சத்தமில்லாத தனிமை கேட்டேன்;
2 யுத்தமில்லாத உலகம் கேட்டேன்;
3 இரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்;
4 ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்;
5 உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்;
6 ஒற்றைக் கண்ணீர் துளியைக் கேட்டேன்;
7 வரிகளில்லா வார்த்தை கேட்டேன்;
8 வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்;
9 இடிகளில்லாத மேகம் கேட்டேன்;
10 இளமை கெடாத மோகம் கேட்டேன்;
11 பறந்து பறந்து நேசம் கேட்டேன்;
12 பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்;
13 புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்;
14 பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்;
15 தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
16 தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
17 இரவில் நனையும் சோலை கேட்டேன்;
18 நீலக்குயிலின் பாடல் கேட்டேன்;
19 நடந்து போக நதிக்கரை கேட்டேன்;
20 கிடந்து உருள புல்வெளி கேட்டேன்;
21 தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
22 எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்;
23
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்;
24 தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்;
25 பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்;
26 பூவுக்கெல்லாம் ஆயள் கேட்டேன்;
27 மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
28 ;பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்;
29 உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்;
30 ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்;
31 வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்;
32 வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்;
33 எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
34 எரியும் தீயாய் கவிதை கேட்டேன்;
35 கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
36 காமம் கடந்த யோகம் கேட்டேன்;
37 சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
38 சிட்டுக்குருவியின் சிறகைக் கேட்டேன்;
39 உச்சந்தலை மேல் மழையைக் கேட்டேன்;
40 உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்;
41 பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்;
42 பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்;
43 நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்;
44 நடுங்க விடாத செல்வம் கேட்டேன்;
45
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
46 ;மழையில் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
47 நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்;
48 நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
49 விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
50 அழுதால் மழை போல் அழவே கேட்டேன்;
51 ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்;
52 எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்;
53 பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்;
54 சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்;
55 ராஜராஜனின் வாளைக் கேட்டேன்;
56 வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்;
57 பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்;
58 பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்;
59 மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்;
60 மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்;
61 சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்;
62 தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்;
63 மழையைப் போன்ற புல்வெளி கேட்டேன்;
64 புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
65 ;புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்;
66 இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்;
67
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்;
68 துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்;
69 தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்;
70 சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்;
71 சொன்னால் தாவும் வேகம் கேட்டேன்;
72 கயவரை எரிக்கும் கண்கள் கேட்டேன்;
73 காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்;
74 சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
75 சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்;
76 மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
77 போலியில்லாத புன்னகை கேட்டேன்
78 தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
79 தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
80 ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்;
81 ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்;
82 காசே வேண்டாம் கருணை கேட்டேன்;
83 தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்;
84 கூட்டுக்கிளி போல் வாழக் கேட்டேன்
85 குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்;
86 இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
87
மரணம் மரணம் மரணம் கேட்டேன்.
அதுவும் கிடைக்கவில்லை.
இவ்வளவும் கேட்ட நான்,
" இறைவா , உன் அருளைக் கொடு "
என்று கேட்கவில்லையே ! 
அதுதான் விதி ! 

No comments:

Post a Comment