கேட்டதும் கேட்காததும் !
1 |
சத்தமில்லாத தனிமை கேட்டேன்;
|
2 | யுத்தமில்லாத உலகம் கேட்டேன்; |
3 | இரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்; |
4 | ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்; |
5 | உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்; |
6 | ஒற்றைக் கண்ணீர் துளியைக் கேட்டேன்; |
7 | வரிகளில்லா வார்த்தை கேட்டேன்; |
8 | வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்; |
9 | இடிகளில்லாத மேகம் கேட்டேன்; |
10 | இளமை கெடாத மோகம் கேட்டேன்; |
11 | பறந்து பறந்து நேசம் கேட்டேன்; |
12 | பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்; |
13 | புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்; |
14 | பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்; |
15 | தானே உறங்கும் விழியைக் கேட்டேன் |
16 | தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் |
17 | இரவில் நனையும் சோலை கேட்டேன்; |
18 | நீலக்குயிலின் பாடல் கேட்டேன்; |
19 | நடந்து போக நதிக்கரை கேட்டேன்; |
20 | கிடந்து உருள புல்வெளி கேட்டேன்; |
21 | தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் |
22 | எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்; |
23 |
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்;
|
24 | தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்; |
25 | பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்; |
26 | பூவுக்கெல்லாம் ஆயள் கேட்டேன்; |
27 | மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் |
28 | ;பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்; |
29 | உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்; |
30 | ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்; |
31 | வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்; |
32 | வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்; |
33 | எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் |
34 | எரியும் தீயாய் கவிதை கேட்டேன்; |
35 | கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் |
36 | காமம் கடந்த யோகம் கேட்டேன்; |
37 | சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் |
38 | சிட்டுக்குருவியின் சிறகைக் கேட்டேன்; |
39 | உச்சந்தலை மேல் மழையைக் கேட்டேன்; |
40 | உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்; |
41 | பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்; |
42 | பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்; |
43 | நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்; |
44 | நடுங்க விடாத செல்வம் கேட்டேன்; |
45 |
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
|
46 | ;மழையில் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் |
47 | நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்; |
48 | நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் |
49 | விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் |
50 | அழுதால் மழை போல் அழவே கேட்டேன்; |
51 | ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்; |
52 | எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்; |
53 | பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்; |
54 | சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்; |
55 | ராஜராஜனின் வாளைக் கேட்டேன்; |
56 | வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்; |
57 | பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்; |
58 | பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்; |
59 | மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்; |
60 | மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்; |
61 | சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்; |
62 | தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்; |
63 | மழையைப் போன்ற புல்வெளி கேட்டேன்; |
64 | புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் |
65 | ;புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்; |
66 | இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்; |
67 |
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்;
|
68 | துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்; |
69 | தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்; |
70 | சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்; |
71 | சொன்னால் தாவும் வேகம் கேட்டேன்; |
72 | கயவரை எரிக்கும் கண்கள் கேட்டேன்; |
73 | காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்; |
74 | சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன் |
75 | சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்; |
76 | மூடியில்லாத முகங்கள் கேட்டேன் |
77 | போலியில்லாத புன்னகை கேட்டேன் |
78 | தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் |
79 | தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் |
80 | ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்; |
81 | ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்; |
82 | காசே வேண்டாம் கருணை கேட்டேன்; |
83 | தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்; |
84 | கூட்டுக்கிளி போல் வாழக் கேட்டேன் |
85 | குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்; |
86 | இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை |
இதிலே எதுவும் நடக்கவில்லை | |
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று | |
87 |
மரணம் மரணம் மரணம் கேட்டேன்.
|
அதுவும் கிடைக்கவில்லை. | |
இவ்வளவும் கேட்ட நான், | |
" இறைவா , உன் அருளைக் கொடு " | |
என்று கேட்கவில்லையே ! | |
அதுதான் விதி ! | |
No comments:
Post a Comment