கற்றல்
| சொல்லிக் கொடுப்பதில் எந்த |
| சிரமம் இல்லை. |
| சொல்லிக்கொடுத்ததை, |
| சொல்லிக் கொடுத்த |
| விதத்தில் புரிந்துகொள்வதுதான் |
| சிரமம். |
| கற்றுக் கொள்பவன், |
| சொல்லிக் கொடுப்பவன் மேல் தன் |
| முழுக் கவனத்தையும் செலுத்த |
| வேண்டி இருக்கிறது. |
| அப்படி ஒரு கவனம் வர, |
| ஆர்வம் தேவை. |
| இந்த ஆர்வத்திற்கு அப்பால், |
| சொல்லிக் கொடுப்பவனுக்கு |
| விஷயம் தெரியும் என்ற |
| நம்பிக்கை, கற்றுக் கொள்பவனுக்குத் |
| தேவைப்படுகிறது. |
| கற்றுக் கொள்ள. நல்ல சூழ்நிலையும் |
| நல்ல நேரமும் தேவைப்படுகிறது. |
| எனவேதான், அன்றைய |
| குருகுலங்களும், ஆசிரமங்களும் |
| பசுமை நிறைந்த சூழ்நிலையில் |
| அமைக்கப்பட்டன. |
| 70, 80 வரை பள்ளிக்கூடங்களும், |
| கல்லூரிகளும், ஊருக்கு வெளியே |
| இருந்தன. |
| கற்றுக் கொள்வதில் தேவைப்படுவது |
| கவனம். கவனம் குறைந்தால், |
| நஷ்டம் கற்றுக் கொள்பவனுக்கேத் |
| தவிர, சொல்லிக் கொடுப்பவனுக்கு |
| இல்லை. |
| எல்லாப் படிப்பும், ஒன்றின் |
| தொடர்ச்சியாய் ஒன்று என்று |
| போவது. ஒரு இடத்தில் கவனம் |
| குறைய, ஒரு பள்ளம் விழும். மற்ற |
| விஷயங்கள் புரியாது போகும். |
| எனவே, எதையும் கற்கும்போது |
| ஆர்வமும், கவனமும்
தேவை ! ஹரி ஓம் ! |
No comments:
Post a Comment