கற்றல்
சொல்லிக் கொடுப்பதில் எந்த |
சிரமம் இல்லை. |
சொல்லிக்கொடுத்ததை, |
சொல்லிக் கொடுத்த |
விதத்தில் புரிந்துகொள்வதுதான் |
சிரமம். |
கற்றுக் கொள்பவன், |
சொல்லிக் கொடுப்பவன் மேல் தன் |
முழுக் கவனத்தையும் செலுத்த |
வேண்டி இருக்கிறது. |
அப்படி ஒரு கவனம் வர, |
ஆர்வம் தேவை. |
இந்த ஆர்வத்திற்கு அப்பால், |
சொல்லிக் கொடுப்பவனுக்கு |
விஷயம் தெரியும் என்ற |
நம்பிக்கை, கற்றுக் கொள்பவனுக்குத் |
தேவைப்படுகிறது. |
கற்றுக் கொள்ள. நல்ல சூழ்நிலையும் |
நல்ல நேரமும் தேவைப்படுகிறது. |
எனவேதான், அன்றைய |
குருகுலங்களும், ஆசிரமங்களும் |
பசுமை நிறைந்த சூழ்நிலையில் |
அமைக்கப்பட்டன. |
70, 80 வரை பள்ளிக்கூடங்களும், |
கல்லூரிகளும், ஊருக்கு வெளியே |
இருந்தன. |
கற்றுக் கொள்வதில் தேவைப்படுவது |
கவனம். கவனம் குறைந்தால், |
நஷ்டம் கற்றுக் கொள்பவனுக்கேத் |
தவிர, சொல்லிக் கொடுப்பவனுக்கு |
இல்லை. |
எல்லாப் படிப்பும், ஒன்றின் |
தொடர்ச்சியாய் ஒன்று என்று |
போவது. ஒரு இடத்தில் கவனம் |
குறைய, ஒரு பள்ளம் விழும். மற்ற |
விஷயங்கள் புரியாது போகும். |
எனவே, எதையும் கற்கும்போது |
ஆர்வமும், கவனமும்
தேவை ! ஹரி ஓம் ! |
No comments:
Post a Comment