Monday 4 May 2020

படித்தடில் பிடித்தது !

படித்தடில் பிடித்தது !

நகரத்து வாழ்க்கை..!

கிராமத்தில் இருந்து 
சென்னை அடுக்கு மாடிக்கு ....

சென்னையில் வேலை பார்க்கும் ஒரு 
இளைஞன் தன்னுடைய கிராமதிருக்கு 
சென்று அவனின் அப்பாவிடம் நான் 
சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் ..
 5 லட்சம் பணம் கேட்டான் , அதற்கு அவர் 
இன்னும் உன்னக்கு திருமணமே ஆகவில்லை 
அதற்குள் ஏன் அவசரம் என்றார் .
இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் 
வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் 
குறைந்தது 60 லட்சம் தேவைப்படும் ... 
தினம் தினம் விலை ஏறி கொண்டே
போகிறது என்றான் ... யோசித்த அப்பா 
சரியான முடிவு தான் .. ஆனால் நான் 
ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க 
வாங்கிய கடனை உன் சம்பளத்தில் 
தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம் .
திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி??? 
நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை 
விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை 
அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் 
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் ...
 5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள 
தொகைக்கு என்ன பண்ணுவ என்று கேட்க .. 
மகன் -அதை வங்கி லோன் தரும் ..நாம் 
அதை மாதம் தவனை முறையில் 20 
வருஷத்திருக்கு செலுத்தலாம் என்றான் ... 
ந்த மாதிரியான வீடு எப்டி இருக்கும் என்று 
கேட்க .. 300 வீடு கொண்ட அடுக்கு மாடி 
குடியிருப்பு ,சகல வசிதிகளும் இருக்கும் ..
அடுக்குமாடி என்றவடுன் அவர் முகம் மாறியது .. 
ஆனால் மகன் ஆசைகேற்ப ஒரு பகுதி 
விவசாய நிலத்தை விற்று வீடு 
வாங்க பணம் கொடுத்தார் ..

வீடு வாங்கிய பின்பு அப்பாவை

 சென்னை வாருங்கள் என்றான் .. 
அவரும் புதிய வீட்டை பார்க்க மிகுந்த 
ஆசையோடு வந்து அடைந்தார் ...ஒவ்வொரு 
வீட்டுக்கும் நல்ல இடைவெளி விட்டே 
பார்த்து பழகிய மனிதன் இப்படி ஒரு வீட்டை 
பார்த்து அசந்து நின்றார் .. உள்ளே சென்று 
900 சதுர அடி வீட்டை பார்த்து இதை 
வாங்கவா நம்மக்கு சோறு போட்ட 
நிலத்தை விற்க சொன்ன என்றார் ....
இது எல்லாம் உங்களுக்கு புரியாது 
இங்க அப்டிதான் ...என்னோட லைப் 
சென்னையில்தான் இன்னிமே நம்ம 
ஊருக்கு விசேசத்துக்கு மட்டும் தான் 
வர போறேன் .. இங்க தனி வீடு எல்லாம் 
வாங்க முடியாது அதுக்கு கோடி
 கணக்குல பணம் வேணும் ...
பேசாம தூங்குங்க வந்தது 
அசதியா இருக்கும் ...

மனம் கேட்காமல் உறங்கினர் ....

மாலை வேலையில் வீட்டை விட்டு 

வெளியே வந்தார் .. மற்ற வீடுகள் 
அனைத்தும் உள்ளே பூட்ட பட்டு இருந்தது ... 
கீழ இறங்கி வந்தவர் சில பெற்றோர்கள் 
தங்கள் சிறு குழந்தைகளை பூங்காவில் 
விளயாட வைத்து கொண்டு இருந்தார்கள் ... 
இவருக்கு மனதில் ஒரு சந்தோஷம் 
அதை பார்த்த படி நின்று கொண்டுஇருந்தர் ..
.பக்கத்தில் வந்த செக்யூரிட்டி அய்யா 
நீங்க சரவணன் சார் அப்பாவா என்றான்... 
அமாம் என்றார் .. சார் சொல்லிட்டு தான் 
போனாரு ... வாங்க சார் டி சாபிடலாம் 
என்றான்... சரி என்று நகரும் போது 
ஏன் பா இங்க யாருமே ஒருதற்கு ஒருத்தர்
 பேசிக்க மாட்டாங்களா எல்லாம்
 வீடு உள்ள பூட்டிகிரங்க ????

அது எல்லாம் அப்படிதான் அய்யா ... 

எல்லாத்துக்கும் நிறைய வேலை ...
காலையில ஆரம்பிச்சு நைட் 
வரைக்கும் .. பல வீட்ல கணவன் 
மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு 
போறாங்க ... அவுங்க சின்ன பசங்கள 
பக்கதுல இருக்க ஹோம் ல விட்ருவாங்க .. 
நைட் யாரு முதல வரங்களோ அவுங்க 
கூட்டிட்டு வருவாங்க ...பெத்த புள்ளைய
யாருகிட்டயோ விட்டு போவாங்கள ??? 
ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம்
 இங்க வர மாட்டங்கள ??? 
அதுவா இவங்கு இருக்க பிஸில ... 
பெத்தவுங்கள பார்க்க முடியாதுனு ....
ஒன்னும் அவுங்க சொந்த ஊர்ல 
விட்ருவாங்க ..இல்லாட்டி முதியோர் 
இல்லத்தில் சேர்த்து விட்ட்ருவங்க .. 
இதை கேட்ட ஆச்சரியத்தில் நின்று 
கொண்டு இருக்க .. 
இதோ போராறே சேகர் சார் உங்க 
வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் இப்போ 
கூட இவர் பையன அங்க இருந்து 
தான் கூட்டிட்டு வரறாரு ...

திகைத்து நின்ற பெரியவர் .. 

தான் மகனிடம் ஏதும் கேட்காமல் 
ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு 
கடந்தார் ...ஒரு நாள் மாலை கீழே 
நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரை பார்த்தார் ... 
என்ன தம்பி ஆச்சிரியமா இருக்கு ..
இன்னக்கி வேலை இல்லையா ?? 
இல்ல அய்யா .. லீவ் போட்டுட்டேன் ... 
எதுவுமே பிடிக்கலே ... 
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு ... 
ஓஹோ சரி சரி ... எங்க உங்கள் மனைவி 
என்றார் ... 
அவளுக்கு செகண்ட் ஷிபிட் 
நைட் 12 மணி ஆகும் .. 
அதுவரைக்கும் நான் பையன 
பார்த்துக்குவேன் ... 
அப்புறம் கலையில நான் வேளைக்கு 
போயிருவேன் ... அவ வீடு 
வேலையெல்லாம் முடிச்சுட்டு 
பையன பக்கத்துக்கு ஹோம் ல 
விட்டுட்டு வேளைக்கு போய்டுவா 
என்றான் சேகர் ... 
அப்போ நீங்க ரெண்டு பேரும் 
பேசிக்கவே மாட்டிங்கள ??? ச
ண்டே மட்டும் தான் பேச முடியும் 
அதுவம் அவளுக்கு முன்றாவது 
ஷிப்ட் நைட் 10 மணிக்கு போய் 
காலையில் 6 மணிக்கு வருவா .. 
அப்போ ஒரே தூக்கம் தான் .. 
சாய்ந்தரம் எதாவது ஹோட்டல் 
போய்ட்டு சாப்பிட்டு வருவோம் என்றான் ... 
எதுக்கு பா இப்டி கஷ்ட படனும் ??? 
இப்படி இருந்த தான் இங்க வாழ முடியும் .. 
அதற்கு அந்த பெரியவர் .. 
நீங்க சொல்றது தப்பு இப்படி இருந்தா 
தான் வசதியா வாழ முடியும்னு சொல்லுங்க .. 
என்றார் .. அதை கேட்டவுடன் 
செவியில் அறைந்தது போல 
இருந்தது சேகருக்கு ...

அடுத்த நாள் தான் மகனிடம் நான் 

ஊருக்கு போறேன் பா என்றார் 
பெரியவர் ..என்ன அப்பா இவளவு 
அவசரம் ....ஒன்னும் இல்ல 
படிச்சா நல்ல இருக்கலாம் ...
அப்டிங்கற எண்ணத்துல தான் உன்னை 
கடன் வாங்கி படிக்க வச்சேன்.. 
ஆனா நீ இன்னும் உன் வாழ்கையே 
ஆரம்பிகல அதுக்குள்ள 
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் 
ஆயிட்ட ... இனிமே உனக்கு கல்யாணம் 
பண்ணா அவளுக்கு அப்புறம் 
உன் குழந்தைக்கு சேர்த்து உன் 
மனைவியும் வேலைக்கு போகணும் ... 
கடைசியா படிப்பு உன்ன ஒரு 
கடன்காரனாத் தான் ஆக்கும்னு 
தெருஞ்சு இருந்த உன்ன படிக்கவே 
வச்ருகமாட்டேன் ....விவசாயம் 
செஞ்சாலும் நான் யார்கிட்டயும் 
உன் படிப்க்கு தவிர கடன் வாங்கல .... 
இனிமே உன் வாழ்கையில நிமதியே 
கிடயாது அப்டிங்க்ரத நினைக்கிற 
போது தான் கஷ்டமா இருக்கு ...

மீண்டும் திரும்பி வருவாய் என்று 

நம்பிகையுடன் கிளம்புகிறேன் 
என்று தனது கிராமத்திற்கு சென்றார் ...

அவருக்கு எப்படி தெரியும் 

இந்த சென்னை வாழ்விற்கு 
என்ட்ரி மட்டும் தான் 
எக்ஷிட் கிடையாது என்று ...

சரவணனும் ,சேகரும் அவர் 

அவர் வேலையை செய்ய தொடிங்கினர்கள்



Dec 24, 2016, 9:08 PM




No comments:

Post a Comment