Monday 25 May 2020

குபேரனின் ஜாதகம்

குபேரனின் ஜாதகம்



இந்த ஜாதகத்தை பூஜை அறையில்
வைத்து வழிபட்டால் குறைவில்லா
செல்வம் பெருகும் என்பது
பலரின் அனுபவ உண்மை.
குபேரனின் பயோடேட்டா.
***************************
இயற்பெயர் - வைச்ரவணன்,
ஏகாஷி பிங்களி
பெற்றோர் - விச்ரவஸ்,
பரத்வாஜர் மகள் ஸ்வேதா தேவி
பிறந்த தேதி -
ஐப்பசி 3ம் தேதி
மங்கள வாரம் -
5064-த்ரேதா யுகத்தில்
ஸ்ரீமுக ஆண்டு.
ஜென்ம நட்சத்திரம் -
பூர்வாஷாடா என்னும்
பூராடம்.
ராசி லக்னம்:
தனுசுராசி
மீன லக்கனம்.
அவதரித்த குறிக்கோள் -
உண்மையான பக்தி நேர்மை
கொண்டவர்கள் பூஜை செய்தால்
சகல ஐஸ்வர்யங்களும்
கொடுத்து வாழ்வை உயர்த்துவது.
தாத்தா - புலஸ்தியர்,
கொள்ளு தாத்தா - பிரம்ம தேவர்,
இருப்பிட முகவரி :
கயிலாய கிரகத்தில்
உள்ள அளகாபுரி.
மனைவி : நிதி என்கிற சித்திரலேகா
சகோதரி : சூர்ப்பணகை,
பிடித்த கிழமை-வியாழன்.
பிள்ளைகள் :
நளகூபன், மணிக்ரீவன்.
வாகனங்கள் :
புஷ்பக விமான மனித வாகனம்.
அபிமான நிதி தேவதாக்கள் -
சங்கம் பதுமம் பதவியும்.
சிறப்புப் பட்டமும் -
நவநிதிகளின் அதிபதி.

சிவபெருமானைக் குறித்து
800 வருடங்கள் தவமியற்றி
அவரது நட்போடு பட்டம்
பெற்றது.

பிரம்மனை நோக்கித் தவமிருந்து
வடக்கு திக்கின் பாலனாக
ஐஸ்வர்யங்களின் அதிபதியாக
பதவி பெற்றது.
செய்த பெரும் சேவை :
பத்மாவதி தாயாரை மணந்து
கொள்ளும் பொருட்டு
ஏழுமலையப்பனுக்குக்
கடன் உதவி.
பிடித்த நைவேத்யம் :
எலம், லவங்கம், கிராம்பு,
வாசனை திரவியங்கள்
கலந்த பால், கேசரி,
அவல் பாயசம்,
சர்க்கரை அன்னம்.
பிடித்த வஸ்திரம் :
சிவப்பு பிரியமாக

தங்கும் இடம் :
வில்வமர நிழல்,
மந்திரங்கள் வசிக்கும் இடம்,
வலம்புரிச்சங்கு,
தாமரை மலர்,
வாஸ்துக் குறையில்லாத வீடு,
சானக்ராமம்,
ஸ்வர்ணத்தால் லிங்கம்,
ஸ்படிக லிங்க வழிபாடு
செய்யும் இடம்.
மேலும் வழிபாடு:
குபேர ஜாதகம்.
குபேர ஜாதகம் என்பது
இதுதான்.இந்த குபேரன்
ஜாதகத்தை
வைரக்கல்லைப்போல
வழிபட்டால்,அது நம்மை
வளப்படுத்தும்.இதை
பிரிண்ட் எடுத்து வைத்துக்
கொள்ளவும்.

உங்கள்பூஜை அறையில்
வைத்து வழிபடவும்.

அபூர்வ குபேர மந்திரம்
*************************
வட திசைக்கு இறைவன் குபேரன்.
செல்வக் கடவுளாகிய குபேரன்
தன் தவத்தால் ,சிவனுக்குத்
தோழனானான். சுக்கிரனின்
கர்வத்தை அடக்கிய பெருமை
குபேரனுக்கு உண்டு.
எந்த ஒரு பூஜையின் இறுதியிலும்
தீபாராதனை செய்யும்போது
குபேரனை வணங்குவது வழக்கம்.
*ராஜாதிராஜாய ப்ரசக்ய ஸாகினி*
*நமோவயம் வைஸ்ரவநாய குர்மஹே*
*ஸமேகாமான் காமகாமாய மஹ்யம்*
*காமேஸ்வர வைஸ்ரவனோ ததாது*
*குபேராய வைஸ்ரவநாய மஹாராஜாய நம:*
தீபம் காட்டும்போது தினமும்
இதைச் சொல்லி குபேரனை
வழிபடவும். வாழ்வு செம்மையுறும்.
குடும்பம் தனிச்சிறப்பு பெறும்.

















நன்றி  : 


ஹரி ஓம் !!


No comments:

Post a Comment